Pages

Thursday, March 3, 2011

நான் யார் --------------------------------------------------------------------------ஆன்மா


ஆன்மா
 
இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.

நான் யார்
இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு நான்ஆக முடியாது. முதல் காரணம் இது என்உடம்பு என்கிறோம். என்உடம்பு, ‘என்கண், ‘என்காது, ‘என்ருசி, ‘என்வாசனை என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ நாம்இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் நாம்இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ நாம்இல்லை. நான், நான்என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே நாம்என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான நான்’.

நான் என்பது நான் இல்லை, எண்ணம் ஒன்றுமே நானாக இருக்கிறது.

அது நீ 
தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் அது நீஎன்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் அது நீஎன்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது 
அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை 
இருத்தலே ஆன்மாவின் உண்மை. நான் ஆன்மாவை அறியேன்என்றோ நான் ஆன்மாவை அறிந்தேன்என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும்.
அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு 
ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.
ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்
பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு. 
ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது. 
எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது. 


Wednesday, March 2, 2011

தவமும், வாழ்த்தும்



மனித மூளையிலே பல மில்லியன் சிற்றறைகள் உள்ளதாம். அதில் தகவல் சேகரிக்கப் படுவடுதும், பறிமாற்றப்படுவதும், நியூரான் எனப்படும் நரம்பு வகைச் செல்களால் நிகழ்கின்றதாம். இந்த நியூரான் களின் எண்ணிக்கை மட்டும் பல்லாயிரம் மில்லியன் கள் என்று அறிவியல் நமக்குச் சொல்கின்றது. அவைகளில் பறிமாறப் பட்டு சேகரிக்கப் படும் தகவல் அலைகள் மட்டுமே பல பில்லியன் கள்.

இந்தத் தகவல் பரிமாற்றம் எனப்படுவது யாது? காந்தம் அலையாக ஒர் பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்கு செல்வதே ஆற்றல் பறிமாற்றம், மேலும் பறிமாறப் படும் ஆற்றலே தகவல் என்னும் பெயர் பெறுகின்றது. பசு ஒன்றைப் பார்த்தால், அது மூளை செல் வரை நியூரான் களின் உதவியால் தான் ஆற்றலாய் பயணிக்கின்றது. அந்த ஆற்றல் கட்டு, அலைக் கட்டு, தான் தகவல் என்பதாம். அது மூளை செல்லில் சென்று ஆற்றல் வடிவில் தங்குவது வரை, அறிவியல் மிகத் தெளிவாய் விளக்கம் தருகின்றது. தங்கிய ஆற்றல் பின் என்னவாகின்றது? இதைத் தான் இன்றைய அறிவியல், தேடிக்கொண்டிருக்கின்றது. இதை அறியாது அவர்களால் மனம் என்பதையும், மூளையையும் இணைக்க இயலாது.
 

தங்கிய ஆற்றல், (அல்லது தங்கும் ஆற்றலின் ஒரு பகுதி) பின் வான் காந்த ஊடகத்தில் விரவுகின்றது. ஒரு காப்பி இருக்கின்றது, அதன் தன்மை, காப்பிக்குள் மட்டுமா? இல்லை, காப்பியைச் சுற்றிய காற்றிலுமா? காப்பியின் ஆற்றல், தானமைந்த ஊடகத்தில் பரவ, அங்கே அதன் ஆற்றலுக்கு மணம் என்னும் பெயர் தரப் படுகின்றது. ஆக ஆற்றல் என்பது தான் சார்ந்த அணுக்கூட்டத்தைச் சுற்றி விரவும் தன்மையுடையதே. இப்படித்தான், மூளையின் அணுக்கூட்டங்களில் தங்கிய ஆற்றல், அவைகளைச் சுற்றிலும் விரவுகின்றது. இந்த விரவும் ஆற்றலே மனம் என்னும் பெயர்பெறுகின்றது. அதாவது மூளையின் காந்த அலை இயக்கமே மனம்.

இந்த விரவும் ஆற்றல், பருப் பொருள் மையம் ஒன்றை அடிப்படையாய்க் கொண்டு சுழலும், ஒரு அலைக் கூட்டத்தின் பகுதியாய் தன்னைக் காண்கின்றது. அந்த அலையியக்க சுழல்வேக விளைவால், விரவிய மூளை செல்லின் ஆற்றல், அல்லது எளிமையாய் தகவல், மையம் நோக்கி குவிக்கப் படுகின்றது. மையம் குவிந்த ஆற்றல், அங்கே ஒரு அலைத் தொகுப்பாகி, மையத்திலேயே உறைகின்றது. ஆக கரு மையம் என்பதே அலைக் கூட்டு உறைவிடமாகின்றது.

இனி சற்றே அறிவியல் பகுதிக்கு வருவோம். அறிவியலுக்கு அந்த மூளையின் கண் தங்கிய ஆற்றல் எங்கு சென்றது என்று விளக்க இயலாததால், மூளை செல்களின் இயக்கத்தை இரண்டாய் பிரிக்கின்றது, ஒரு அறிவியலாளரின் மனம். அது யாதெனில், தங்கிய ஆற்றலை மீண்டும் தருவிக்க இயன்றால், அது புற மனம், தருவிக்க இயலாததாய், ஆனால், பதிவான, சேகரிக்கப் பட்ட ஆற்றல் நடு மனம் மற்றும் ஆழ் மனம். மேலும், அது இத்தகைய உண்மைகளைக் கொண்டு, இன்னும் ஆழமாய்ப் போகின்றது. அது யாதெனில், 1. மூளையின் பெரும் பகுதி இயக்க நிலையில் இருப்பதில்லை. ஆனால் அதிலும் பதிவான தகவல்கள் இருக்கவே செய்கின்றன. 2. இயக்க நிலை மூளை, புற மனம் என்னும் அலை இயக்கத்தோடு தொடர்புடையது, 3.
  இயக்க நிலை இல்லா மூளை செல்கள், நடு மனம் மற்றும் ஆழ் மனம் என்னும் அலை இயக்கத்தோடு தொடர்புடையது. 
 இந்த இயக்கத்தில் இல்லா மூளை செல்கள் என்பதை, நாம் வேதாத்திரிய மொழியில் கண்டால், அந்தப் பகுதி மூளை சிற்றறைகளுக்குள் காந்த ஆற்றல் தொடர்ந்து, நியூரான் செல்கள் மூலம் பாய்வதில்லை. அப்படி ஒருவேளை ஏதெனும் ஒரு முறை கொண்டு, அப்பகுதிக்கும் காந்த ஆற்றலை பாய்ச்ச இயன்றால், அந்தப் பகுதியும் விழித்துக் கொள்கின்றது. அது விழிப்படைந்த நிலையில், மனதுக்கு சில அமானுஷ்ய சக்திகள் தானாய் கிட்டுகின்றன, அவற்றில் சில, 1. வரும் காலம் அறிதல், 2. பிறர் மனம் அறிதல் இன்ன பிற என்பனவாம். இவை எல்லாம் மூளையின் காந்த ஆற்றல் மிகுதி நிலையில் கிட்டும் சில அலையியக்கத் தன்மைகள்.

இந்த உயிரியல் பகுதி ஒருபுறமிருக்க, சில அடிப்படை இயற்பியல் தகவல்கள், இனி இக்கட்டுரைக்கு வேண்டும். அதையும் நாம் இங்கே காண்போம்.
 

ஒரு அலையியக்கம், அதன் அலைச் சுழலால் அறியப் படும். இருவேறு அலைச் சுழலில் பயணிக்கும் ஆற்றல் கட்டுக்கள் தத்தம் இயக்கத்தில் முட்டிக் கொள்வது அரிது என்பதை நாம் அறிவோம். இதே தான் இந்த வான் காந்த அலையியக்கம் என்பதிலும் பயன் பட விருக்கின்றது. ஒரு கூட்டமான இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். இரயிலின் கடைசிப் பெட்டிக்கு அருகாமையில் நின்று, இரண்டு பெட்டி முன்செல்லும் ஒருவரை நாம் அழைக்கின்றோம், அந்த ஒலி அலை ஒரு குறிப்பிட அதிர்வெண், ஆற்றலோடு காற்று ஊடகத்தில் பயணிக்கத் துவங்குகின்றது என்று கொள்வோம். அங்கு நின்று கொண்டிருக்கும் அனைத்து மனிதர்களின் பேச்சு என்னும் நிகழ்வில் வெளிவரும் ஒலியலை அனைத்தும் அதே அதிர்வெண்ணில், ஊடகத்தின் அதே பகுதியில் பரவிக் கொண்டிருக்கின்றன. நமது ஒலியாற்றல், அதிர்வெண் ஒத்த நிலை தன்னில், அவ்வலை அனைத்தோடும் மோத நேரிடுவதால், அங்கே ஆற்றல் இழப்பு ஏற்பட்டு, நமது ஒலி அலை, சற்றுத் தொலைவிலேயே ஆற்றல் முழுமையாய் இழந்து, மடிந்து போகின்றது. ஆக எல்லாரோடும் ஒத்த அலை நிலையில் ஒரு அலையை வெளியிடுவதால் ஒரு பயனுமில்லை. அது வான் காந்த ஊடகத்தில் ஆற்றல் இழந்து பயணிக்க இயலாது போகின்றது.

மனம் என்பது பீட்டா, ஆல்ஃபா, காம்மா, டெல்டா, என்னும் நான்கு அதிர்வெண்களில் தன் அலைகளை வெளியிட வல்லது என்பதை நாம் அறிவோம். அலைகளை வெளியிடுதல் என்பது நாம் முன்பு சொன்னது போன்று மூளை சிற்றறை கொண்ட காந்த ஆற்றலில் விரவுதல். அவ்வாற்றல் அலை வடிவில், தன் அதிர்வெண் சார்ந்து வான் காந்த ஊடகத்தில் பரவும் போது நிகழ்வதைப் பார்ப்போம். 

நாம் இரயில் நிலையத்தில் வெளியிட்ட அந்த ஓர் அலை போன்றதே, 14-40 என்னும் அலை நிலையில் வெளி வந்த மூளை அலையும். அது வான் காந்த ஊடகத்தில் பயணிக்கத் துவங்கியவுடன், அதே அதிர்வெண்ணில் விரவும் அலை பலவற்றை சந்திக்கின்றது. ஒரே அதிர்வெண், முட்டாது போக இயலாது, மேலும் புவியை ஒட்டிய வான் களத்தில், மனிதர் தம் மன அலை அனைத்தும் பீட்டா என்னும் ஒரே அதிர்வெண் நிலையில் விரவுவதால், இத்தகைய அலைகளின் கூட்டம் மிக அதிகமாய் இருக்கும். விளைவு? இரயில் நிலைய ஒலி அலை போலவே இந்த அலையும், ஆற்றல் இழந்து வான் காந்தத்தில் மடியவே செய்கின்றது. இதை அறிவியலில் (Interference - Noise - Signal Congestion) என்றெல்லாம் பல்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள்.

வான் காந்த ஊடகத்தில் முட்டாது மோதாது, அலையை பல மைல் தூரம் பாய்ச்சுவது எப்படி என்பதை ஆய்கின்றது.

அந்த இரயில் நிலைய எடுத்துக் காட்டுக்குள் நுழைவோம். இரண்டு பெட்டி முன் செல்பவரை, மனிதர்களால் வெளியிட இயலாத அலைச் சுழலில் ஒரு ஒலி அலை கொண்டு அவரை அடையவே இயலும். இதையே தான் வெளவால் என்னும் உயிரினம் செய்கின்றது. இப்பொழுது உங்கள் தோளில் ஒரு வெளவாலும், அவரது தோளில் ஒரு வெளவாலும் இருப்பதாய்க் கொண்டால், அவை இரண்டும், ஒலி அலைகளை வெளியிட்டு, மனிதர்களின் எந்த ஒரு பேச்சு ஒலி அலையோடும் மோதிக் கொள்ளாது, தத்தம், நலங்களை விசாரித்துக் கொள்ளவே இயலும். ஏனெனில், அவற்றின் அதிர்வெண், அலை நீளம் வேறுபாடானது. ஆனால், அவைகள் வெளியிடுவதும், ஒலி அலைகளே

இதே வித்தை தான், வாழ்த்து என்பதிலும் நம்மால் பயன் படுத்தப் படுகின்றது. மனதின் பீட்டா என்னும் அலை நிலையில் வெளிவரும் அலை, இயற்கை விதிக்குட்பட்டு, ஆற்றல் இழந்து மடிவதால், ஆல்ஃபா, என்னும் 7-14 அலை நிலையில் ஒரு அலையின் துணையை நாம் நாடுகின்றோம்,. வாழ்த்தும் போது நமது மனத்திலிருந்து புறப் படும், அந்த ஆல்ஃபா அலை, அந்த வெளவால் ஒலி அலை போல், ஆற்றல் இழப்பு அவ்வளவாய் இல்லாது பயணிக்கும், காரணம், வான் காந்த ஊடகம் புவியை ஒட்டிய நிலையில் 14-40 சார்ந்த அலைகளையே மிக அதிகமாய் கொண்டிருக்கும். ஆற்றல் இழக்கா நிலையில் அந்த அலை, மிக விரைவில், முழுத்தகவலாய் முகவரி சென்று சேரும். இதுவே வாழ்த்தின் இரகசியம். வாழ்த்து தவ இறுதியில் மன அலைச் சுழல் குறைந்த நிலையில் தரப் படுவதற்கும் இதுவே காரணம்.